வடக்கு மாகாணம் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெப்பற்றிக்கொலாவ பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
34 அகவையுடைய யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தினை சேர்ந்த முகுந்தன் என்ற பொலீஸ் விசேட பிரிவினை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் இன்று (8) ஹெப்பற்றிகொலாவ பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குழிக்க சென்றவேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சுமார் பத்து ஆண்டுகளாக பொலீஸ் விசேட பிரிவில் கடமையாற்றி வந்த இவர் தமிழர் பகுதிகளிலும் கடமைகளில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் ஹெப்பற்றிகொலாவ மருத்துவமனையில் பிரதேச பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.முல்லைத்தீவு மாவட்டத்திலும் இவர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
