வடக்கில் வனஇலாக,வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லையிடும் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது-பா.உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
16.04.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டுப்பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பின்போது மக்கள் தெரிவித்த முறைப்பாட்டினை தொடர்ந்து மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதுஅவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கில் காணிகளுக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் போடுவது தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் வடக்குமாகாண ஆளுனர்,வடக்குமாகாணத்தினை அரசாங்க அதிபர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,காணிபிரதி அமைச்சர் நீர்பாசன பிரதி அமைச்சர்,வனஇலாகா திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அந்த கலந்துரையாடலில் வடக்கில் வனஇலாக திணைக்களத்தினால் காணிகளுக்கு எல்லையிடும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளோம் கடந்த அரசாங்க காலகட்டத்தில் ஜீ.பி.எஸ்.தொழில்நுட்பம் ஊடாக எல்லையிடப்பட்டுள்ளது அதுவும் வர்த்தகமானி அறிவித்தல் ஊடாக எல்லையிடப்பட்டுள்ளது இதனை நிறுத்தியுள்ளோம்.
கிராமத்து மக்கள் கிராமசேவையாளர்,பிரதேச செயலாளர்.மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடி மக்கள் குடியிருக்கும் காணிகள் அல்லது விவசாயம் செய்யும் காணிகளை விடுவிக்கும் வகையிலான கலந்துரையாடல்கள் ஐனாதிபதி மட்டத்தில் நடைபெற இருக்கின்றது அதன் பின்னர் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.