முல்லைத்தீவில்1957 மாணவர்கள் தரம் 5 பரீட்சையில்!

முல்லைத்தீவில்1957 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளார்கள்

நாடளாவிய ரீதியில் நேற்று 15.09.2024 இடம்பெற்றதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1957 மாணவர்கள் தோற்றியுள்ளார்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றுள்ளது

அந்தவகையில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1381 மாணவர்களுக்காக16 பரீட்சை நிலையங்களிலும் துணுக்காய் கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 576 மாணவர்களுக்காக 08பரீட்சை நிலையங்களிலுமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றுள்ளது

15.09.2024காலையில் மாணவர்கள் ஆலயங்களில் சென்று வழிபட்டு ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோன்றுவதை அவதானிக்க முடிந்ததோடு பரீட்சை நிலையங்களுக்கு பூரண பாதுகாப்பு ஏற்ப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது

Admin Avatar