Monday, April 28, 2025
HomeUncategorizedவீட்டு காணிக்குள் பைப்லையின் செய்து சாராய விநியோகம்!

வீட்டு காணிக்குள் பைப்லையின் செய்து சாராய விநியோகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் தேடுதல் நடத்திய பொலீசார்
வீட்டின் உரிமையாளர் ஒருவர் அவரதுகாணிக்குள் நீர் பொருத்தும் பைப்லையின் செய்த மாதிரி கோட உற்பத்தி செய்து சட்டவிரோத கசிப்பு காச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டிற்குள் சென்ற பொலீசார் அங்கு நிலத்தில் புதைக்கப்பட்ட சட்டவிரோத மதுபானமான கேடாவினை அதன் மேல் பைப்லையின் செய்து வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் இரு பெரல் கோட இதன்போது மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரை கைதுசெய்த முள்ளியவளை பொலீசார் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் சந்தேக நபரையும் நாளை(30.03.2024) மாவட்ட நீதிமன்றில் முன்னிபைப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த நபர் ஏற்கனவே வீட்டிற்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காச்சிய நிலையில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தனது காணியில் ஆங்காங்கே கசிப்பு காச்சவதற்கான முதல்நிலை தயாரிப்பான கோடவினை கலந்து நிலத்தில் புதைத்துவைத்து அதனை நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் கொண்டு எடுத்து வீட்டில் வைத்து கசிப்பு காச்சி விற்பனை செய்துவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments