Monday, April 28, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் பெற்ற மகனை கொடூரமாக தாக்கிய இளம் தாய் கைது!

புதுக்குடியிருப்பில் பெற்ற மகனை கொடூரமாக தாக்கிய இளம் தாய் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு சுதந்திரபுரம் பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது வீட்டில் தனது 7 அகவை மகனிற்கு புத்தக பாடங்களை கற்றுக்கொடுக்கும் போது மகனை கொடூரமாக தாக்கிய காணொளி கிராம மக்களால் எடுக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த தாயாரை கைதுசெய்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்டமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

25 அகவையுடைய இளம் தாயார் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து 5 மாத கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றார் அவரின் முதலாவது கணவனுக்கு பிறந்த 7 அகவையுடைய பாடசாலை சிறுவனுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் போது தடியால் தாக்கியுள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலீசார் குறித்த தாயினை கைதுசெய்துள்ளார்கள் 22.03.2024 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments