Monday, April 28, 2025
HomeUncategorizedதனியார் பேருந்தின் புறக்கணிப்பால் மக்கள் பெரும் சிரமம்!

தனியார் பேருந்தின் புறக்கணிப்பால் மக்கள் பெரும் சிரமம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தனியார் பேருந்துசேவையினர் இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பினை ஈடுபட்டுள்ளார்கள்

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளார்கள் குறிப்பாக கிராமங்களில் இருந்து நகர மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மருத்துவ தேவை மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பேருந்து இல்லாத நிலையில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்

பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர்கள் அரசதிணைக்கலங்களில் பணி புரியும் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருவதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்ற வகையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் வவுனியா போன்ற மாவட்டங்களில் சேவையில் ஈடுபட்டு வருகின்றார்கள் இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் மக்களும் பேருந்து இன்றி அவதிப்படுவதை காணக் கூடியதாக இருக்கின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments