Friday, May 9, 2025
HomeUncategorizedதேராவில் கிராமத்தில் 37 குடும்பங்களுக்கு வீடும் இல்லை காணியும் இல்லை!

தேராவில் கிராமத்தில் 37 குடும்பங்களுக்கு வீடும் இல்லை காணியும் இல்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களில் 37 குடும்பங்களுக்கு வீடும் இல்லை காணியும் இல்லாத நிலை  காணப்படுவதாக கிராம அபிவிருத்தி  சங்கம் தெரிவித்துள்ளது.

தேராவில் கிராமத்தி;ல 347 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இந்த நிலையில் புதிதாக பலர் திருமணம் செய்துகுடும்பங்களாக பதிவினை மேற்கொண்டு வந்துள்ளார்கள் இவ்வாறு கைக்குழந்தைகளுடன் வீடும் இல்லாதநிலையில் பெற்றோர்களின் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் சிறு கொட்டகைகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள் இவ்வாறு  காணியும் இல்லாத நிலையில் வீடும் இல்லாத நிலையில் 37 குடும்பங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த குடும்பங்களுக்கான காணிகளையும் வீட்டுத்திட்டங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என கிராம மட்ட அமைப்புக்கள் அரக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments