முல்லைத்தீவு மாவட்டத்தில் 24ஆயிரத்தி 531 வாக்கு அளிக்கப்படவில்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86ஆயிரத்தி 889 வாக்காளர்கள் காணப்பட்டாலும் ஐனாதிபதி தேர்தலில் 24ஆயிரத்தி 531 வாக்காளர்கள் வாக்களிக்காத நிலை காணப்படுவதாக வாக்களிப்பு தகவல்கள் ஊடகா அறியமுடிகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் அனைத்தும் பூர்த்தியடைந்து எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்களார்கள் 86ஆயிரத்தி 889 பேர் தகுதி பெற்றுள்ளார்கள் இவர்கள் மாவட்டத்தில் உள்ள 137 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை வாக்களித்துள்ளார்கள்.

இவ்வாறு வாக்களித்தவர்களில்71.76 வீதமானவர்களே வாக்களித்துள்ளார்கள் 62ஆயிரத்தி 358 வாக்காளர்களே வாக்களித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
தபால் மூலமாக 3515 பேரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று 58846 பேரும் வாக்களித்துள்ளார்கள்.

தபால்மூல வாக்கெண்ணும் நவடிக்கைகள் வாக்கெண்ணும் நிலையமான முல்லைத்தீவு மத்திய கல்லூரியான வாக்கெண்ணும் நிலையத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Tagged in :

Admin Avatar