மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேர் கைது!
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் நேற்றையதினம் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து வாகனங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (22.02.2024) இரவு 6.50 மணியளவில் புதுமாத்தளன் பகுதியிலுள்ள வீட்டுகாணி ஒன்றில் 4 பேரடங்கிய குழுவினர் புதையல்…
அளம்பில் றோ.க.மகாவித்தியாலய மாணவர்களின் வீதி ஓட்டப்போட்டி!
அளம்பில் றோ.க.மகாவித்தியாலய மாணவர்களின் வீதி ஓட்டப்போட்டி! 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு முல்லைத்தீவு அளம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியால மாணவ மாணவிகளுக்கிடையிலான வீதி ஓட்டப்போட்டி 23.02.024 இன்று நடைபெற்றுள்ளது. பாடசாலை முதல்வர் திரு.முகுந்தன் தலைமையில் குமுழமுனையினை பிறப்பிடமாக்கொண்டு கனடாவில் வசித்து வருகின்ற திருவாளர் சூகந்தசாமிபத்மநாதன் அவர்களின் முற்றுமுழுதான…
1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை !
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை ராஜ் சோமதேவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது (22.01.2024) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றையதினம் இட்பெற்ற வழக்கின்…
கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி!
கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி நியமிக்கப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டுக்கான வடமாகாண ரீதியில் நடாத்தப்பட்ட முகாமைத்துவ சேவை பதவியுர்வு பரீட்சை (Supra Exam) பெறுபேறுகள் அடிப்படையில் மாகாண ரீதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் திணைக்களங்களில் இருந்து தோற்றிய அதிகாரிகளில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள்…
புதுக்குடியிருப்பு-வசந்தபுரம் பேராற்றில் மணல் அகழ்வதற்கு தடை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வசந்தபுரம் பேராற்றினை அண்டிய பகுதியில் இடம்பெற்றுவரும் மணல் அகழ்வினை உடனடியாக ரத்து செய்யகோரி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் அவர்களினால் கடந்த 29.01.2024 அன்று மாவட்ட அரசாங்க அதிபருக்கும் திணைக்கள பிரதிநிதிகளுக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடையம் கடந்த 16.02.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில்…
கிளி-இராமநாதபுரத்தில் வாள் வெட்டு!
இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் நேற்றைய தினம் இரவு 9 மணி அளவில் இது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக மிளகாய் தூள் கொண்டு வீசப்பட்டு சரமாரியாக வாழ்வெட்டு வீசப்பட்டுள்ளது இதன் போது ஐந்து பேர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து அதில் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்…
வி.புலிகளின் தங்கத்தை தேடி முக்கிய கருவிகளுடன்!
வி.புலிகளின் தங்கத்தை தேடி முக்கிய கருவிகளுடன்! தருமபுரம் பொலிஸ் நிலையத்தால் 2024.02.16ம் திகதியன்று கிளிநொச்சி வழக்கு இலக்கம்: AR02/24 வீழ் தரமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ளஇடம் தனியாருக்குச் சொந்தமான கானியோன்றில் LTTE அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தர்மபுரம் பெலிசாரினால் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு…
தேசிய லோத்தர் சபையின் முகவர் நிலையம் விசமிகளால் தீர்க்கிரை!
புதுக்குடியிருப்பில் தேசிய லோத்தர் சபையின் முகவர் நிலையம் விசமிகளால் தீர்க்கிரை!முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் தேசிய லொத்தர் சபையின் முகவர் ஒருவர் முகவர் நிலையம் அமைத்து லொத்தர் விற்பனையில் ஈடுபட்டு வந்திருந்தார் இந்த நிலையில் நேற்று (19)இரவு விசாமிகளால் குறித்த லொத்தர் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதன்போது அதற்குள் இருந்த கதிரைகள் மேசைகள் மற்றும் ஒரு…
களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரமந்தனாற்றுப் பகுதியில் மீட்பு!
விசுவமடுவில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரமந்தனாற்றுப் பகுதியில் மீட்பு! முல்லைத்தீவு விஸ்வமாடு தொட்டியடி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(18) நடைபெற்ற மாட்டு வண்டி சவாரியை பார்க்கச் சென்ற நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பூட்டிவிட்டு மாட்டுவண்டி சவாரியை பார்த்துக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிலை காணாத நிலையில் குறித்த நபர் புதுக்குடியிருப்பு…
புதுக்குடியிருப்பில் 7மில்லியன் ரூபா செலவில் இரண்டு முதியோர் இல்லங்கள்!
முதியோர்களுக்கான தேசிய செயலக நிதி அனுசரணையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரண்டு முதியோர் இல்லங்கள் 7 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் முதியோர் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. முதியோர்களுக்கான தேசிய செயலக நிதி அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலகத்தின் கண்காணிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்தில் 35 இலட்சம் ரூபா…