Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இருட்டு மடு கிராமத்தினை சேர்ந்த 25 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் 30.12.2023 இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாடான சுவீஸ் நாட்டில் இருக்கும் ஈசன் குடும்பத்தினரின் நிதி உதவியில் இருட்டுமடு கிராமத்ததினை சேர்ந்த வெள்ளப்பாதிப்புக்குள்ளான 25 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு உடையார் கட்டு வடக்கு கிராம அலுவலகர் பிரிவில் கிராம சேவையாளர் உ.நாமிலா தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் அவர்கள் கலந்துகொண்டு உலர் உணவுபொதிகளை வழங்கிவைத்துள்ளார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *