Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூறு குடும்பங்களுக்கு நிவாரண உதவி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூறு குடும்பங்களுக்கு நிவாரண உதவி

முல்லைத்தீவு மாவட்டத்தில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது 

சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினுடைய நிதி பங்களிப்போடு அன்பே சிவம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண பணிகளின் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் , முத்துவிநாயகபுரம் கிராம அலுவலர் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு இந்த  உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன

குறித்த நிகழ்வில் கிராம அலுவலர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அன்பே சிவம் அறக்கட்டளையின்  உறுப்பினர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு இந்த உலர் உணவுப்பதிகளை வழங்கி வைத்தனர் ஒவ்வொன்றும் தலா 2200 ரூபா பெறுமதியான நூறு உலருணவு பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *