Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

வெடிப்பட்ட குடும்பஸ்தரை இனம் காட்டிய வளர்ப்பு நாய்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் வெடியில் சிக்கி  கிடந்த போது அவரது டைகர் எனப்படும் வளர்பு நாய் உறவினர்களிடம் வந்து தனது ஏஜமானின் ஆபத்து தொடர்பில் அசைவுகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்து உறவினர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் மணவாளன் பட்ட முறிப்பினை சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான 66 அகவையுடை பழனி வடிவேல் என்பவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தேன் எடுப்பதற்காக 05.02.2024 காட்டிற்கு தனது வளர்பு நாயான டைகர் எனப்படும் நாயுடன் சென்றுள்ளார்.இதன்போது காட்டிற்குள் இருந்து சட்டவிரோத வெடிபொருள் வெடித்ததில் குறித்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நிலையில் வளர்ப்பு நாயான டைகர் தனது எயாமான் இன்னி தனியா வீடு திரும்பி தனது சோகத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

இதனை அவதானித்த உறவினர்கள் காட்டிற்கு சென்றவரைகாணவில்லை என உறவினர்கள் தேடி சென்றுள்ளார்கள் இதன்போது அவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகளை மாங்குளம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *