Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முள்ளியவளையில் மோட்டார்சைக்கில் விபத்தில் இளைஞன் பலி மற்றும் ஒருவர் படுகாயம்!

முள்ளியவளையில் மோட்டார்சைக்கில் விபத்தில் இளைஞன் பலி மற்றும் ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று 09.04.2024 இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாமூலை விஸ்ணு கோவில் வீதியில்  வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 அகவையுடைய திருலோகச்சந்திரன் கேதீஸ்வரன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
17 அகவையுடைய மற்றும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *