Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவில் காட்டுயானை தாக்குதலில் குடும்பஸ்தர் படுகாயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் 13.02.2024 அன்று வெலிஓயா பிரதேசத்தில் வயல் காவலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
மாலை 6.00 மணியளவில் வயல் காவலுக்கு செல்லும் போது காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் ஜனபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது கால் ஒன்று முறிந்த நிலையில் மீட்கப்பட்ட அவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜனகபுரம் வெலிஓயா பகுதியினை சேர்ந்த 50 அகவையுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *