Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் பங்கு பற்றிய வீரர்களுக்கான சீருடைகள் வழங்கிவைப்பு!

2023 ஆண்டுக்கான வடக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் முல்லை கல்வி வலயத்தினை பிரதிநித்துவப்படுத்தி விசுவமடு பாரதிமகாவித்தயாலயத்தினை சேர்ந்த 42 மாணவர்கள் தடகள விளையாட்டு போட்டியில் பங்கு பற்றியதுடன் தேசியமாட்டத்திற்கும் தெரிவாகியுள்ளார்கள்.

விசுவமடு பாரதிமகாவித்தியாலயம் வலய மட்டத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டிகளில் முன்னிலையில் திகழ்ந்து மாகாண மட்டத்திலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டி சில போட்டிகளில் தேசிய மட்டத்திற்கும் தெரிவாகி போட்டியில் பங்கு பற்றியுள்ளார்கள்.

இந்த நிலையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் சுவீஸில் உள்ள நிஷான் டிஜிதல் உரிமையாளரும் விசுவமடுவில் உள்ள புகழ்ப்பிறை உணவகம் விசுவமடு உரிமையாளருமாகிய நிசாந்தன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் ரூபா செலவில் வீரர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு 01.11.2023 அன்ற பாடசாலையில் நடைபெற்றுள்ளது.

பாடசாலை முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நன்கொடையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான விளையாட்டு சீருடைகளை வழங்கிவைத்துள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *