Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் ஐஸ்சுடன் கைதானவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகளவான போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருகின்றமை யாவரும் அறிந்த உண்மை இந்த நிலையில் தேராவில்,விசுவமடு மாணிக்கபுரம்,வள்ளுவர்புரம் பகுதிகளில் அதிகளவில் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வருகின்றன

இந்த நிலையில் 02.02.2024 அன்று கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தேராவில் பகுதியில் ஐஸ் எனப்படும் அதிக விலைஉடைய போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவரை கiதுசெய்துள்ளார்கள்.
இவரிடம் இருந்து 21 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.  23 அகவையுடைய தேராவில் விசுவமடு பகுதியினை சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளான்.

குறித்த இளைஞனையும்,சான்று பொருட்களையும் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைத்தில் பாரப்படுத்தியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பொலீசார் இளைஞனையும் சான்று பொருட்களையும் 03.02.2024 இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது சந்தேக நபரான இளைஞனை எதிர்வரும் 13.02.2024 விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *