Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

பயிற்சியினை நிறைவு செய்த 21 பேருங்கு  நிரந்தர நியமனம்!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பயிற்சியினை நிறைவு செய்த 21 பேருங்கு  நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு  பயிற்சியினை நிறைவு செய்த 21 பேருக்கு நேற்றய தினம் (12) சுகாதார பணியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நேற்றய தினம்  (12.07.2023)  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

நியமனம் வழங்கும் இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்( நிர்வாகம்), மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.லிங்கேஸ்வரன், மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *