Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய இழுவைப்படகுகள் வரமாட்டார்கள்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய இழுவைப்படகுகள் வரமாட்டார்கள்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 17.04.24 இன்று மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடிவிட்டு இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்திய இழுவைப்படகுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரமாட்டார்கள் இந்தியாவில் மீன்களின் இனப்பெருக்க…

புதுக்குடியிருப்பில் 35 ஆடுகளை திருடிய 4பேர்கொண்ட கும்பல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் ஆட்டுப்பட்டி ஒன்றில் இருந்த ஆடு மேய்ப்பர்களை தாக்கிவிட்டு பட்டியில் இருந்த 35 ஆடுகளை திருடி சென்ற சம்பவம் ஒன்று கடந்த 16.04.2024 அன்று இடம்பெற்றுள்ளது. மல்லிகைத்தீவு பகுதியில் வாழ்வாதாரமாக ஆடுகளை வளர்த்து வருகின்றார்கள் இவ்வாறு இருவர் குறித்த ஆடுகளை வளர்த்து வந்த நிலையில் இதனை கண்காணித்த கும்பல் ஒன்று ஆட்கள்…

வெத்திலைக்கேணி கடற்படையினருக்கு பாராட்டு தெரிவித்த முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்!

வெத்திலைக்கேணி கடற்படையினருக்கு பாராட்டு தெரிவித்த முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்! கடந்த 28.05.2023 தொடக்கம் 17.04.2024 வரையில் வெத்திலைக்கேணி கடற்படை முகாம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 225 வெளி இணைப்பு இயந்திரங்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்  34 சுருக்குவலை தொழில் படகுகளும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெத்திலைக்கேணி கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று 17.04.2024 முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் நடைபெற்ற கடற்தொழில்…

முல்லைத்தீவில் 40 ற்கு மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்ட பாரிய வேலைத்திட்டம்!

முல்லைத்தீவில் தங்கள் சேவைகளை அமைச்சருக்கு பட்டியலிட்ட அரசா சார்பற்ற நிறுவுனங்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ திரு டக்ளஸ் தேவானந்தா நிறுவன அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாலில் ஈடுபட்டார். இன்றைய தினம் (17) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் குறித்த…

முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (17) நண்பகல் 12.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மீனவசங்க பிரதிநிதிகளுடன் மேற்கொண்டார். முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் பல…

முல்லைத்தீவில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையில் சட்டவிரோத கடற்தொழில்!

முல்லைத்தீவில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையில் சட்டவிரோத கடற்தொழில்-கொக்கிளாயில் 200க்கு மேற்பட்ட சுருக்கு வலைகள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையான கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறிவருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் கடற்தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்கள். 17.04.2024 இன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல…

மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று (13.04.2024) இரவு பதிவாகியுள்ளது. மகளின் வீட்டிற்கு சென்ற மாமனார் மீது மருமகன் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 62 அகவையுடைய பொன்னுச்சாமி செல்வரூபான் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இவரது உயிரிழப்பு…

முள்ளியவளையில் ஹெரோயின் போதைப்பொருளடன் பெண் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 490 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பெண்ணினை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். முள்ளியவளை பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய போதைப்பொருளுடன் 36 அகவையுடைய குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளார்கள்.சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது 16.04.2024 வரை…

கேப்பாபுலவில் தற்கொலைக்கு முயற்சித்தவர் உயிரிழப்பு!

முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கோப்பாபுலவு பகுதியில் வசிக்கும் 34 அகவையுடைய நபர் தனது வீட்டிற்கு முன் உள்ள மரம் ஒன்றில் கயிற்றினை கட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் கிராம வாசிகள் அவரை காப்பாற்றி மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பு…

மிக பிரமாண்ட தயாரிப்பில் பண்டாரவன்னியன் நாடகம்!

முல்லைத்தீவு முள்ளியவளை மாவட்டத்தில் நாட்டுக்கூத்து உள்ளிட்ட கலைகளை வளர்த்தெடுக்கும் கிராமங்களில் ஒன்றாக காணப்படும் முள்ளியவளை பிரதேசத்தில் பல விருதுகளை வென்ற கலைஞர்களின் தரமான நடிப்பில் உருவான வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாற்று நாடகம் எதிர்வரும் 20.04.2024 அன்று இரவு 8.00 மணிக்கு அரங்கேறவுள்ளது. முதுபெரும் கலைஞர் என்.எஸ். மணியம் அவர்களின் நெறியாள்கையில்…