முல்லைத்தீவில் கருநாட்டுக்கேணியில் காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை!
கடந்த 29.11.2025 அன்று முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி பகுதியில் வசித்துவந்த 16 அகவையடைய இளைஞனை காணவில்லை என உறவினர்களினால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியினை சொந்த முகவரியாக கொண்ட குறித்த இளைஞன் கடந்த புயலுக்கு முன்னர் கருநாட்டுக்கேணி பகுதியில் தயாரின் வீட்டில் வசித்துவந்துள்ளார்
கடந்த 28.11.2025 ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் கொக்குளாய்,கொக்குத்தொடுவாய்,கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளுக்கான தரைவளிப்பாதையான நாயாற்று பாலம் ஊடாக போக்குவரத்து பாலம் உடைவினால் இன்றுவரை தடைப்பட்டுள்ளது இந்த நிலையில் இந்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் எந்த தகவலும் அறிந்துகொள்ளமுடியாத நிலையில் உறவினர்கள் காணப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பில் உறவினர்களினால் முல்லைத்தீவு பொலீசாரிடம் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த இளைஞனை கண்பவர்கள் உடனடியாக 768459796

