Saturday, November 1, 2025
HomeMULLAITIVUஉலக வங்கியின் 20 மில்லியன் நிதி உதவியில் விளாப்புகுளம் விவசாயிகளிடம் கையளிப்பு!

உலக வங்கியின் 20 மில்லியன் நிதி உதவியில் விளாப்புகுளம் விவசாயிகளிடம் கையளிப்பு!

01.11.2025 இன்று உலக வங்கியின் நிதி உதவியுடன் காலநிலைக்கு சீரான விவசாய நீர்பாசன திட்டத்தின் கட்டம் இரண்டின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள பளம்பாசி கிராமத்தில் விளாப்புகுளம் அணைக்கட்டு புனரமைக்கப்பட்டு விவசாயிகளின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

விளாப்பு குளத்தின் அணைக்கட்டு விவசாயிகள் கையளிக்கும் நிகழ்விற்கு உலக வங்கியின் ஆலோசகர் பொறியியலாளர் மனோகரன், பொறியியலாளர் பிரதீப் மற்றும் ஒட்டுசுட்டான் கமநலசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி உதவியில் காலநிலைக்கு சீரான விவசாய நீர்பாசன திட்டத்தின் கீழ் கமநலசேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள 23 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன இவ்வாறு புனரமைக்கப்பட்ட குளங்களில் முதல் குளமாக பளம்பாசி கிராமத்தில் உள்ள விளாப்பு குளம் விவசாயிகளின் பாவனைக்காக 20 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments