Sunday, June 22, 2025
HomeMULLAITIVUகடலில் காணாமல் போன மீனவர் உயிரிழந்திருப்பதாக குடும்பத்தினர் அறிவிப்பு!

கடலில் காணாமல் போன மீனவர் உயிரிழந்திருப்பதாக குடும்பத்தினர் அறிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடந்த (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலில் தேடுதல் நடத்தியும் எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த மீனவர் இறந்திருப்பதாக உறவினர்கள் அறிவித்து கிராமத்தில் கண்ணீர் அஞ்சலிசெய்வதற்கான ஏற்பாட்டினை அறிவித்துள்ளார்கள்.


62 அகவையுடைய வின்சன்ரிப்போல் அன்ரனி கர்னல் என்ற 8 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவரின் இறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளார்கள் 23.06.2025 நாளை காலை 7.00 மணிக்கு தீர்த்தக்கரை புனித அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளார்கள்.


மீனவர் காணாமல் போனமை தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments