முல்லைத்தீவில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்! சட்டவிரோத தொழிலாளர்களால்b கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம்!
https://youtube.com/shorts/9RCoZuKheUQ?si=hIPlnsP1HxKJLeXC
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து நேற்று (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் இன்று மீனவர்கள் குறித்த மீனவர் சென்ற மீன்பிடி படகை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வந்திருக்கின்ற போதும் மீனவர் இதுவரை கரை சேரவில்லை
குறித்த மீனவர் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் சுனாமியில் தன்னுடைய ஐந்து பிள்ளைகளை பறிகொடுத் நிலையில் சிலாவத்தை தீர்த்தக்கரையில் தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்துவரும் வின்சன்டிபோல் அன்ரனிகருணல் (அருமை) எனும் 62 வயதுடைய மீனவர் நேற்றைய தினம் இரவு கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்றிருக்கின்றார்
இந்நிலையில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற ஏனையவர்கள் குறித்த மீனவர் சென்ற படகு தனியாக கடலில் மிதந்து வருவதை அவதானித்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு கடலில் இருந்து அவர் பயணித்த படகினை கரைக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றார்கள்
முல்லைத்தீவு கடலிலே சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன
தென்பகுதியில் இருந்து வருகின்ற சட்டவிரோத மீன்பிடியாளர்கள் மற்றும் புல்மோட்டை பகுதியில் இருந்து வருகின்ற சட்டவிரோத மீன்பிடியாளர்கள் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் டயனமற் பாவித்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகளை பாவித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறநிலையில் சாதாரண மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற முல்லைத்தீவு மீனவர்களுடன் தொடர்ச்சியாக பல்வேறு முரண்பாடுகளுடன் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்
இதனுடைய பின்னணியாக குறித்த மீனவர் சட்டவிரோத மீன்பிடியாளர்களால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியில் வலுப் பெற்றுள்ளது
இந்நிலையில் குறித்த மீனவரை தேடி இன்று காலை எட்டு படகுகளில் மீனவர்கள் கடலில் சென்று தேடியபோதும் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் அவர்கள் கரை திரும்பியுள்ளனர்
அவரது சகோதரரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர் பயணித்த படகில் படகு இயந்திரத்தில்j இன்னும் ஒரு படகு மோதியதற்கான ஆதாரங்களும் இரத்த கரைகளும் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்