வடமகாணத்தில் புகைப்பட போட்டிக்கு விண்ணப்பம்!

வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்கம் உல சுற்றலா தினம் 2024 முன்னிட்டு சுற்றுலாவுடன் கூடிய அமைதி எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக புகைப்பட போட்டி ஒன்றிற்கான அறிவிப்பினை விடுத்துள்ளது.

கிராமங்களில் உள்ள சனசமூக நிலையங்களின் ஊடாக புகைப்படப்போட்டி நடத்துவதற்கு வடமாகாண உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் பிரதேச எல்லைக்குள் காணப்படும் சுற்றுலா தளங்களை,கலை,கலாச்சார,பண்பாட்டு அடையாள சின்னங்களை சிறந்த இயற்கை சார் விடையங்கள் போன்ற அம்சங்களை வெளிக்கொண்டு வருதல் பிரதான நோக்கம் ஆகும் உங்கள் பிரதேசங்களில் உள்ள சனசமூக நிலையங்கள் ஊடாக இந்த புகைப்பட போட்டிக்கு விண்ணப்பிக்கமுடியும் சான்றிதழும் பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளவர்கள் இதில் ஆர்வம் கொண்டவர்கள் உங்கள் கிராமங்களில் உள்ள சனசமூக நிலையங்களை தொடர்பு கொண்டு இதனை சமர்ப்பிக்கலாம்
மேலும் இது தொடர்பான முழுமையான விபரங்களை கீழ் பார்வையிடுங்கள்

CamScanner 10-16-2024 14.18
CamScanner 10-16-2024 14.18
CamScanner 10-16-2024 14.18
Admin Avatar