Tuesday, April 29, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் வீட்டு ஓடுபிரித்து கொள்ளை!

புதுக்குடியிருப்பில் வீட்டு ஓடுபிரித்து கொள்ளை!

புதுக்குடியிருப்பில் வீட்டு ஓடுபிரித்து கொள்ளை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றின் வீட்டின் கூரை பிரித்து நுளைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகை பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பம் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்கள்.

27.08.204 அன்று இரவு வீட்டின் கூரையினை பிரித்துக்கொண்டு வீட்டிற்குள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சிறுதொகை பணம் மற்றும் இருபது இலட்சம் ரூபா வங்கியில் வைப்பு செய்யப்பட்ட நிலையான வைப்பு  சான்றிதழ்கள், இரண்டு பவுண் எடையுள்ள நெக்ளஸ்,மோதிரம் என்ப கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக 29.08.2024 அன்று புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் முன்னெடுத்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments