உடையார் கட்டில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயர்தர மாணவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் இரவு நேரம் மாலை நேர வகுப்பு முடித்து வீதியால் மிதிவண்டியில் பயணித்த மாணவன் மீது வேகமாக சென்ற ஹயஸ் வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது

இதன்போது வகானத்தில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் ஏற்றிசெல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

Admin Avatar