திருமுறுகண்டி புத்தர் சிலை முல்லைத்தீவு ஊடகவியலாளர்களுக்கு சம்மந்தம் இல்லை!
இந்த செய்தி நீக்கம் செய்துள்ளமையினையிட்டு கவலை கொள்கின்றோம்
நந்திக்கடலில் வீழ்நத இளைஞன் உயிரிழப்பு!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்கு உட்பட்ட நந்திக்கடல் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் 01.10.23 இன்று காலை இடம்பெற்றுள்ளது. மந்துவில் பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய தர்மராசா நிசாந்தன் என்ற இளைஞன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார். நந்திக்கடல் கட்டந்தோனியால் கோவிலுக்கு…
புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ்பிரிவிற்கு உட்பட்ட கோம்பாவில் பகுதியில் நேற்று 30.09.23 நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்7 ஆம் வட்டாரம் சிவநகர் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இளைஞன் பத்து இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான கே.ரி.எம். மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞனே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளர்….
நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது-எம்.ஏ.சுமந்திரன்!
முல்லைத்தீவு மாவட்ட நீதி பதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது இந்த மோசமான நீதி புரழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் நாங்கள் உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு இருக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் முல்லைத்தீவில் வைத்து தெரிவித்துள்ளார் 01.10.23 இன்று முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நடைபெற்ற மக்களுக்கான குடிநீர்திட்டம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து…
சிங்கள அரசு தமிழ்மக்கள் மீது தொடர்சியாக பயங்கரவாத உளவியல் போரை மேற்கொண்டு வருகின்றது
இலங்கை அரசாங்கத்தின் வனவளத்திணைக்களம், படையினர்,வனஜீவராசிகள் திணைகளம் எம் மக்கள் மீது பயங்கரவாத நடவடிக்கையினை உளவியல்ரீதியாக மேற்கொண்டுவருகின்றார்கள் என முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 01.10.23 இன்று முல்லைத்தீவு முள்ளியவளைப்பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில். முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதி…
முல்லைத்தீவில் பலருக்கு உயிர்அச்சுறுத்தல்!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியினை துறந்து நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில் இன்னும் பலர் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார்கள். இன்று 01.10.2023 முல்லைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவினர்களின் போராட்டத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தனக்கும் உயிர் அச்சுறுத்தல்…
நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல், எமக்கான நீதி எப்போது?
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களது போராட்ட இடத்திற்கு முன்பாக இன்று (01.10.2023) காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் உள்ள நாட்டில் எமக்கு நீதி…