Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

யானை தாக்குதலுக்கு இலக்கான வயேதிபர் மருத்துவமனையில்!

ஒட்டுசுட்டான் மானுருவி பகுதியில்யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்
பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கருவேலன் கண்டல் கிராம அலுவலகர் பிரிவில் மானுருவி கிராமத்தில் இந்த சம்பவம் நேற்று 11.10.2023 இரவு இடம்பெற்றுள்ளது.

இரவு வேளை வீதியால் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை
யானை தாக்கியுள்ளது இதன்போது காயமடைந்த வயோதிபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

55 அகவையுடைய மானுரூவி கிராமத்தினை சேர்ந்த குமாரசாமி அரசகுமார் என்ற வயோதிபரே யானைத்தாக்குதலுக்கு இலக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *