Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 25 புதிய கிராமஅலுவலகர் நியமனம்(விபரம் உள்ளே)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நட்டில் 2100 கிராம அலுவலகர்களுக்கான புதிய நியமன கடிதங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்த நியமனங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை முடிவுகளின் படி பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்ற 2100 விண்ணப்பதாரிகளுக்கு கிராம உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் அவர்ளின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன அதனை நாம் இணைத்துள்ளோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான இடங்களில் கிராம அலுவலகர்கள் இல்லாத நிலையில் ஒரு கிராம அலுவலகர் இரண்டு கிராமங்களை பார்த்து வேலைசெய்து வருகின்றார்கள் இனிவரும் காலங்களில் இந்த சிக்கல் நிவர்த்தி செய்யப்பட்டு கிராமங்களில் கிராம சேவர்களுக்கான தட்டுப்பாடு நிலவாது மக்களுக்கான சிறந்த சேவை வழங்கப்படும் என எதிர்பாக்கின்றோம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *