Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

பொலீசாரின் அதிரடி நடவடிக்கை கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகை!

29.12.23 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதி புதுக்குடியிருப்பு பொலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டு வந்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக குறித்த பகுதியில் பாரியளவில் கசிப்பு உற்பத்தி  செய்யப்பட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் கசிப்பு காச்சுவுதற்காக பயன்படுத்தப்பட்ட 16 பெரல்களுடன் 60 லீற்றர் கசிப்பு 810 லீற்றர் கோட என்பன மீட்கப்பட்டுளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 32 அகவையுடைய ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவற்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *