Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் ஐஸ்சிற்கு அடிமையான கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவர் கைது!

புதுக்குடியிருப்பில் ஐஸ்சிற்கு அடிமையான கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவர் ஐஸ்மற்றும் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கிராம சேவையாளர் ஒருவர் போதைக்கு அடிமையான நிலையில் கடந்த காலங்களின் மக்கள் மத்தியில் கடமையாற்றி வருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 15.01.2024 இன்று புதுக்குடியிருப்பு பொலீசார் சந்தேகத்தின் பெயரில் கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவரை கைதுசெய்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில்

 அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட போதை பாவனை தொடர்பான மருத்துவ பரிசோதனையின் போது குறித்த இரு நபர்களின் கிராம சேவையாளர் ஐஸ்,ஹெரோயின் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் மற்றை நபர் ஹெரோயினுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

38 அகவையுடைய கிராம சேவையாளர் மற்றும் 27 அகவையுடைய மற்றைய நபர் ஆகியோர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் இவர்களை 16.01.24 நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் சட்ட நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *