Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

சுதந்திரபுரத்தில் கத்தி முனையில் கொள்ளை-வசமாக மக்களிடம் மாட்டிய திருடர்கள்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தில் கத்தியினை காட்டி கொள்ளையடிக்க முற்பட்ட திருடர்களை மக்கள் பிடித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் இன்று 02.10.23 காலை இடம்பெற்றுள்ளது.

சுதந்திரபுரம் பகுதியில் சிறு கடை ஒன்றுவைத்து வாழ்வாதாரம் மேற்கொண்டுவரும் பெண் ஒருவரின்கடைக்கு சென்ற கொள்ளையர்கள் கத்தியினை காட்டி குறித்த பெண்ணிடம் இருந்த பணங்களை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளார்கள் இதன்போது கிராம மக்களால் குறித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டு பொலீசாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு பொலீசார் சென்று திருடர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நேற்றைய தினமும் மூன்று பேர் கொண்ட இந்த கொள்ளைக்கும்பல் ஒன்று சுதந்திரபுரம் கிராமத்திற்குள் வந்து கடை ஒன்றில் கத்தியினை காட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் இந்த நிலையில் இன்றும் இவ்வாறு கத்திமுனையில் பணப்பறிப்பில் ஈடுப்ட கொள்ளையர்களை மக்கள் பிடிக்கமுற்பட்ட போது ஒருவர் தப்பி ஓடிய நிலையில் இருவரை மக்கள் பிடித்துள்ளார்கள்

குறித்த திருடர்கள் வசிப்பிடம் தொடர்பில் முன்னுக்கு பின் முரணான இடங்களை சொல்லி வந்த நிலையில் ஒருவரின் அடையாள அட்டையில் கிளிநொச்சி முறிப்பு என முகரி காணப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
மக்களால் பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் இருவரையும் மக்கள் புதுக்குடியிருப்பு பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *