Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

கைவேலிப்பகுதியில் கடையில் கொள்யிட்ட சந்தேகத்தில் ஓருவர் கைது!

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரவு வேளை கடைக்குள் நுளைந்த கொள்ளையர்கள் கடையினை உடைத்து கடையில் இருந்து பெறுமதியான பால்மா உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள் இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடையின் உரிமையளரின் கெட்டித்தனத்தினால் கொள்ளையிட்ட கொள்ளையன் ஒருவன் இனம் காணப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

மாத்தளன் பகுதியினை சேர்ந்த குறித்த சந்தேக நபரால் கொள்ளைச்சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த கொள்ளையுடன் தொடர்புடைய ஏனையவர்களை கண்டறியும் நோக்கில் பொலீஸ் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன

குறித்த சந்தேக நபர் ஏற்கனவே பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *