Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

அரசியல் வாதிகள் இல்லாத மாவட்டத்தில் -மக்களின் அரசியல் வகிபாகம் தொடர்பிலான கலந்துரையாடல்!

ஒன்று முல்லைத்தீவு அமைதி தென்றல் விடுதியில் நடைபெற்றுள்ளது.வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர் என பலர் கலந்துகொண்டுள்ளார்க்ள.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது இதன்போது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தமிழர்களின் அரசியல் தீர்வு விடையத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடையங்கள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

எக்டோ நிறுவனத்தில் மேலாளர் க.பிரசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *