Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

jaffna

அரிசி விலையினை குறைக்க கோரி முல்லைத்தீவிர் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசே அரிசி விலையை உடனடியாக 100 ரூபாய் விற்கு கொண்டு வருக- வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டுவலியுறுத்தல் இலங்கை அரசு மக்களின் சோற்றில் கை வைக்காமல் அரிசியின் விலையை 100 ரூபாயின் கீழ் குறைத்து மக்களின் பட்டினி சாவை தவிர்த்து பொருளாதார சுமையை உடனடியாக குறைக்க வேண்டும் என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு…

வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை புதுக்குடியிருப்பில் ஆரம்பம்!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறைத்  திணைக்களம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்துகின்ற  வட  மாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை புதுக்குடியிருப்பில் இன்று சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது  வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் உற்ப்பத்தியாளர்களின் உற்ப்பத்திகளை விற்ப்பனை செய்வதும் அவர்களது உற்ப்பத்தி பொருட்களை  வந்து அவர்களது உற்ப்பத்திகளை வெளிக்கொண்டு வரும் நோக்கமாகவும் ஏற்ப்பாடு…

முள்ளியவளையில் மோட்டார்சைக்கில் விபத்தில் இளைஞன் பலி மற்றும் ஒருவர் படுகாயம்!

முள்ளியவளையில் மோட்டார்சைக்கில் விபத்தில் இளைஞன் பலி மற்றும் ஒருவர் படுகாயம்! முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 09.04.2024 இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மாமூலை விஸ்ணு கோவில் வீதியில்  வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில்…

முல்லைத்தீவில் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம் திறந்து வைப்பு!

தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் அவர்களால்  இன்று திறந்து வைப்பு முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளை தலைமையகத்தின் கீழ் நந்திக்கடல் பகுதியில்  ஸ்தாபிக்கப்பட்ட இராணுவப் படையணி பயிற்சிப் பாடசாலையானது தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி பாடசாலையாக அமைப்பதற்காக இராணுவத்தினரால் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணிக்கு…

புதுக்குடியிருப்பினை சேர்ந்த இருவர் பூநகரியில் வெடிபொருட்களுடன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த இருவர் பூநகரிபகுதியில் வெடிபொருட்களுடன் கிளிநொச்சி பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் 07.04.2024 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் றெட்பான விசுவமடுவினை சேர்ந்த 22 அகவையுடைய நபர் மற்றும் குரவில் உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நபர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்களிடம் இருந்து ரி.என்.ரி வகை…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி-இதுவரை நிதி கிடைக்கவில்லை! 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க  இதுவரை நிதி கிடைக்கவில்லை!  வழக்கு விசாரணை வைகாசி  மாதம் 16 ம் திகதிக்கு ஒத்திவைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு  தொடர்பான  வழக்கு  இன்றையதினம் (04)  முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றில் இடம்பெற்றது முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றில் நீதிபதி…

பிரமந்தனாறு பகுதியில் கத்திக்குத்து மயில்வாகனபுரம் இளைஞன் பலி!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு சந்திப்பகுதியில் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் கத்திக்குத்திற்கு இலக்கான இளைஞன் தர்மபுரம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 04.04.2024 மாலை இடம்பெற்றுள்ளது.மயில்வாகனபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இந்த உயிரிழப்பு தொடர்பில் தர்மபுரம் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் உயிரிழந்தவரின் உடலம்…

தேராவில் பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்!

தேராவில் பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்! யானை வேலி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை முல்லைத்தீவு  மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் மாலை வேளையிலேயே ஊர்மனைக்குள் வருகின்ற யானைகள்   அதிகாலை வரை  ஊரில் உள்ள பயன் தர மரங்கள் மற்றும்…

வெப்ப அலைவீசும்- மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

நாளை03-04-24 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாக காணப்பட்டாலும் உள்நிலப்பகுதிகளில் வெப்பநிலை மிக உயர்வாக காணப்படும். நாளை முதல்(03.04.2024) வடக்கு மாகாணத்தின் வவுனியா,மாங்குளம், முறிகண்டி, நட்டாங்கண்டல், துணுக்காய், ஓமந்தை, கரிப்பட்ட முறிப்பு, சின்னத்தம்பனை, பாலைப் பாணி,…

ஜயன்கன்குளம் பிரதேச விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவைகள் நிலயப்பிரிவுக்குட்ப்பட்ட ஐயன்கன்குளம் பிரதேத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமக்கான மேலதிக விதைப்பு  தண்டத்தை அறவீடு செய்வதை நிறுத்துமாறும் உரிய பிரதேச கமக்கார அமைப்பை புணரமைக்குமாறும் கோரி கவணயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு வவுனிக்குளம் நீர்ப்பாசன  திணைக்களத்தின் கீழுள்ள ஐயன்கன்குளம் குளத்தின் கீழ் கடந்த 2023 சிறுபோக நெற் செய்கையின்…