Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

வவுனியா

வவுனியாவில் இருவர் பொலிஸாரால் கைது!

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனக் கூறி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வன்னி மாவட்டங்களுக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வவுனியாவில் இன்று (05) நடைபெற்றது. இதன்போது காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிலர் ஜனாதிபதியை காண்பதற்காக நகரசபை வீதியூடாக உள்நுழைய முற்பட்டுள்ளனர். அவர்களை…

மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு உதவி வழங்கி வைப்பு!

பெண் தலைமை தாங்கும் குடும்பமான மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்தினருக்கு கனடா செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும்  நோக்கில் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தையல் பொருட்கள் திருகோணமலையில் அவரது மனைவி இல்லத்தில்…

வவுனியா ஆலங்குளம் பிள்ளையார் முன்பள்ளி கட்டிடம் அமைத்துக்கொடுப்பு!

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள ஆலங்குளம் பிள்ளையார் முன்பள்ளி கட்டிட வசதி இல்லாத நிலையில் இயங்கிவந்துள்ளது. இந்த நிலையில் தமிழ் நிலம் மக்கள்  அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்தோரின் நிதிப்பங்களிப்புடன் முன்பள்ளிக்கான  கட்டிடம் அமைத்து முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஆலங்குளம் கிராமத்தினை சேர்ந்த 22 மாணவர்கள் கல்விகற்று வரும் இந்த முன்பள்ளிக்கான கட்டிடங்கள்…

வெளிநாட்டு மோகம் பணத்தினை கொடுத்து ஏமாறாதீர்கள்-பொலீசாரின் அறிவிப்பு!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பேஸ்புக், வாட்ஸ்அப் இல் வரும் தகவல்கள் தொடர்பில்,அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை..! வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரு…

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களே விழிப்பாக இருங்கள்!

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் கைவரிசை! சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர் அந்த வைகையில் கடந்த 02ம திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த NGC  சொகுசு பேரூந்தில் ஒரு குடும்பம் முற்பதிவு மேற்கொண்டு கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தது பேரூந்து புத்தளம் பகுதியை…

வடக்கில் சீனாவின் பிரசன்னம் ஆமை புகுந்த வீடாக மாறும் இலங்கை!

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது மெல்ல மெல்ல தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்திலும் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதை சீன தூதுவர் வவுனியாவிற்கு விஜயம் செய்து  வவுனியா மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தமை மூலம் மேலும் உறுதியாகியுள்ளது. இவர்களது திடீர் அக்கறை காலம் காலமாக…

வவுனியா மண்ணின் கல்வி சொத்து முத்துசாமி முகுந்தரதன்!

பிரபல இந்துநாகரிக ஆசானும் முன்னாள் வவுனியா நகரசபை உபதலைவருமான முகுந்தரதன் உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா பண்டாரிகுளம் ஐடியல் கல்வி நிறுவன இயக்குனரும், பிரபல இந்துநாகரிக ஆசிரியரும் , முன்னாள் வவுனியா நகரசபை உபதலைவருமான முத்துச்சாமி முகுந்தரதன் ஆசிரியர் அவர்கள் கடந்த 06-11-2023 திங்கள் அதிகாலை சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்…

வடக்கினை சேர்ந்த 67 பாடசாலைகளுக்கு தலா 1.5 இலட்சம் நிதி உதவி அவுஸ்ரேலியாவால் வழங்கிவைப்பு!

நாடு முழுவதும் பாடசாலைகளில் பாடசாலை தோட்டத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு அவ்வாறு பாடசாலைகளில் விவசாய செய்கைக்கான தோட்டத்திற்கான உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் பாடசாலை தோட்டங்களை மேற்கொண்ட தெரிவுசெய்யப்பட்ட 67 பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்தங்கிய பாடசாலைகளுக்கு இந்த நிதி உதவியினை அவுஸ்ரேலியா மக்களின்…

ஐ.நா வில் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களை சந்தித்த ஏ.ஆர். ரகுமான்

கடந்த மாதம் 11ம் திகதி தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் சபையின் 54வது கூட்டத்தொடரின் கடைசி வாரத்திலும் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அரசியல் பிரமுகர்கள்,பெண்கள்,இளையோர் என பல்வேறு தரப்பினரும் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமாக தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த வேளையில் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் தமிழ் ஆரவலருமான திரு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள்…

YOUTUBEல் கருத்து வெளியிட்ட பிரபல ஜோதிடர் சிறையில்!

மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறான. கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்ட பிரபல ஜோதிடர் இந் திக்க தொட்டவத்த எதிர்வரும் பட்டார். 10ஆம் திகதி வரை விளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளார். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முந்தினம் பிற்பகல் அவர் கைது செய்யப் பட்டார். யூரியூப் சனலில்…