Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Latest post

முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (17) நண்பகல் 12.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மீனவசங்க பிரதிநிதிகளுடன் மேற்கொண்டார். முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் பல…

முல்லைத்தீவில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையில் சட்டவிரோத கடற்தொழில்!

முல்லைத்தீவில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையில் சட்டவிரோத கடற்தொழில்-கொக்கிளாயில் 200க்கு மேற்பட்ட சுருக்கு வலைகள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையான கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறிவருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் கடற்தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்கள். 17.04.2024 இன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல…

மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று (13.04.2024) இரவு பதிவாகியுள்ளது. மகளின் வீட்டிற்கு சென்ற மாமனார் மீது மருமகன் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 62 அகவையுடைய பொன்னுச்சாமி செல்வரூபான் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இவரது உயிரிழப்பு…

முள்ளியவளையில் ஹெரோயின் போதைப்பொருளடன் பெண் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 490 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பெண்ணினை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். முள்ளியவளை பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய போதைப்பொருளுடன் 36 அகவையுடைய குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளார்கள்.சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது 16.04.2024 வரை…

கேப்பாபுலவில் தற்கொலைக்கு முயற்சித்தவர் உயிரிழப்பு!

முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கோப்பாபுலவு பகுதியில் வசிக்கும் 34 அகவையுடைய நபர் தனது வீட்டிற்கு முன் உள்ள மரம் ஒன்றில் கயிற்றினை கட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் கிராம வாசிகள் அவரை காப்பாற்றி மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பு…

மிக பிரமாண்ட தயாரிப்பில் பண்டாரவன்னியன் நாடகம்!

முல்லைத்தீவு முள்ளியவளை மாவட்டத்தில் நாட்டுக்கூத்து உள்ளிட்ட கலைகளை வளர்த்தெடுக்கும் கிராமங்களில் ஒன்றாக காணப்படும் முள்ளியவளை பிரதேசத்தில் பல விருதுகளை வென்ற கலைஞர்களின் தரமான நடிப்பில் உருவான வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாற்று நாடகம் எதிர்வரும் 20.04.2024 அன்று இரவு 8.00 மணிக்கு அரங்கேறவுள்ளது. முதுபெரும் கலைஞர் என்.எஸ். மணியம் அவர்களின் நெறியாள்கையில்…

முள்ளியவளையில் வித்தினை ஏற்படுத்திய இரு இளைஞர்களும் பலி!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று 09.04.2024 இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல்…

புதுக்குடியிருப்பில் குட்டைக்குள் விழுந்த வயோதிபர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கைவேலிப்பகுதியில் வயல்நீர் வடிந்தோடும் குட்டை ஒன்றிற்குள் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று(11) இடம்பெற்றுள்ளது. தேவிபுரம் அ பகுதியினை சேர்ந்த 65 அகவையுடைய முனுசாமி திருச்செல்வம் என்பவர் கூலி வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் கைவேலி வயல்வெளிப்பகுதியில் காணப்படும் குறித்த குட்டைக்கு அருகில் அவரது மிதிவண்டி காணப்பட்டுள்ளது. இதனை…

வன்னியின் பெரும்சமர்- கிளிநொச்சி மகாவித்தியாலயம் தனதாக்கியுள்ளது!

வன்னியின் பெரும்சமர் எனப்படும் கிளிநொச்சி மாகவித்தயாலய அணிக்கும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அணிக்கும் இடையிலான இரண்டுநாள் துடுப்பாட்ட போட்டியில் கிளிநொச்சி மகாவித்தியாலய அணி வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கியுள்ளது. வன்னியின் பெரும்சமர் 13 ஆவது தடவையாக இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்றுள்ளன. இன்று இறுதிநாள் போட்டியில் 111 ஓட்டங்கள் பெற்று கிளிநொச்சி…

பிரமந்தனாற்றில் கத்திக்குத்திற்கு பலியான இளைஞனுக்கு நீதிகோரி திரண்ட மக்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரமந்தனாற்று  பகுதியில் இளைஞன் ஒருவனால் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் உயிரிழப்பிற்கு நீதிகோரியும் கைதான சந்தேக நபருக்கு பிணைவழங்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியும் கிராம மக்கள் ஒன்றிணைந்து 09.04.2027 அன்று  மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள். கடந்த 04.04.2024 அன்று கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலத்தில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியினை…