Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி!

கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

கரைதுறைப்பற்று  பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி நியமிக்கப்பட்டுள்ளார்.

2023ம் ஆண்டுக்கான வடமாகாண ரீதியில் நடாத்தப்பட்ட முகாமைத்துவ சேவை பதவியுர்வு பரீட்சை (Supra Exam) பெறுபேறுகள் அடிப்படையில் மாகாண ரீதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் திணைக்களங்களில் இருந்து  தோற்றிய அதிகாரிகளில்  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினை சேர்ந்த ஜெயக்குமார் ராசஜோகினி ஆறாவது இடத்தைப் பெற்றிருந்தார்

இந்த நிலையில் பதவி உயர்வு பெற்று கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக  நியமிக்கப்பட்டு (20)  நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்

இந்நிலையில் இவர் (21) புதன் கிழமை கரைதுறைப்பற்று பிரதேச சபையில் தனது  கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *